ஆற்றுகை
- writtentext kum performance text kum vilakkam solla mudiuma si. (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்)
நாடகப்பிரதியை‘நாடகம்’ என்ற சொல்கிறோம். நிகழ்த்துப்பிரதியைக்குறிக்க ஆட்டப்பிரகாரம் என்றொரு சொல் தமிழகப் பாரம்பரிய நாடகக்குழுக்களிடம் இருந்தது; இருக்கிறது. பழைய நாட்டார் நாடகங்களின் ஆட்டப்பிரகாரங்கள் பெரும்பாலும் பாடல்களால் ஆனவை. தனியாகப் பாடவேண்டிய பகுதி, குழுவாகப்பாட வேண்டிய பகுதி என்ற குறிப்புகளையும், என்ன வகையான மெட்டில் பாட வேண்டும் என்ற இசைக்குறிப்புகளையும்கொண்டதாக இருக்கும். இடையிடையே ‘ வசனம்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். என்ன வசனம் என்று இருக்காது. நாடகவாத்தியார் அல்லது நடிக்கும் நடிகரின் திறனுக்கேற்ப வசனங்கள் இட்டு நிரப்பப்படும். அவ்வசனங்களை நிரந்தரமாக எழுதி வைத்துக்கொள்வதில்லை.
உங்கட நாட்டில் - இலங்கையில்- ஆற்றுகை என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆற்றுகை,பொருத்தமான சொல். அந்தச் சொல் புதிதாக உருவாக்கிய சொல் என நினைக்கிறேன். ஆற்றுகை என்றொரு இதழ்கூட வந்தது.
- evatrukuidaijilana vithiyasam (அவற்றுக்கு இடையிலான வித்யாசம்?)
நாடகாசிரியர் , காலம், களம், காட்சி, அங்கம் போன்ற குறிப்புகளையும் உரையாடலையும் எழுதித்தருவார்.தமிழில் கிடைக்கக் கூடிய நாடகப்பிரதிகளில் இந்தக் குறிப்புகளோடு பாத்திரங்களின் வயதுஎவ்வளவு இருக்கும் என்ற குறிப்புகளையும் நான் பார்த்திருக்கிறேன். சில நாடகாசிரியர்கள்‘ திரை விலகும்போது, மணி அடித்தவுடன், வெளிச்சம் வருகிறது; இருள் கவிகிறது போன்ற குறிப்புகளைஅடைப்புக்குறிக்குள் தந்திருப்பார்கள். இன்னும் சிலர் - நடந்தபடி, நின்று, உரக்க, தூரத்தில்கேட்கிறது போன்ற குறிப்புகளையும் தந்துள்ளதை வாசித்திருக்கிறேன். இவையே பெரும்பாலும்நாடகப்பிரதியின் அடையாளங்கள்.
ஆற்றுகப்பிரதிமுற்றிலும் வேறானது. நெறியாளர் அல்லது இயக்குநர் தான் நிகழ்த்த இருக்கும் மேடை வடிவம்,பாத்திர நுழைவு, வெளியேறல், வசனம் பேசுவதற்காக நகரவேண்டிய திசை, அளவு, நிற்றல், அமர்தல்,உரையாடலை எதிர்கொள்ளும் பாத்திரத்தை சந்திக்கும் நிலை போன்ற குறிப்புகளைப் படமாக வரைந்துகாட்சிப்படுத்தியிருப்பார்.
ஆற்றுகைப்பிரதியில் இயக்குநர் குறிப்போடு ஒளி, ஒலி அமைப்பு, அரங்க அமைப்புக் கலைஞர்களிடம் பெறப்படும் வரைபடங்களும் ஓவியங்களும், ஒப்பனைக்குறிப்புகளும், உடைவடிவங்கள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருக்கும். ஒத்திகை அட்டவணைகள்,வாங்க வேண்டியபொருட்கள், பொருட்கள் கிடைக்கும் இடம் என எல்லாம் கொண்ட பிரதியே ஆற்றுகைப்பிரதி.தேர்ந்த இயக்குநர் ஆற்றுகைப்பிரதியை உருவாக்கி, உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு ஓய்வுகொள்வதும் உண்டு. கடைசி கட்ட ஒத்திகையின் போது வந்து நின்று வேலை வாங்குவார்.முழுமையான ஆற்றுகைப் பிரதி கிடைத்தால் இயக்குநர் இல்லாமலேயேஅவரது உதவியாளர்கள் நாடகத்தை மேடையேற்றி விடுவார்கள்
- ipo aatrukaiyai vaithu kondupirathiyai uruvakkalam thane sir (இப்போ ஆற்றுகையை வைத்துக்கொண்டு பிரதியை உருவாக்கலாம்தானே சார்)
- text, subtext enra erandukkumana difference? ( டெக்ஸ்ட், சப்டெக்ஸ்ட் இரண்டுக்குமான டிபரென்ஸ்?
எழுதியவரின்கருத்திலிருந்து பெற்ற நிகழ்காலப்பொருத்தம், கூடுதல் விளக்கப்பகுதிக்கான அழுத்தம், ஒரு உரையாடலில் இடம் பெறும் பலதளப் பொருண்மை போன்றவற்றைக்கண்டுபிடித்து மேடையேற்றத்தில் கொண்டுவருவதை இந்தக் கலைச்சொல்லால் குறிக்கலாம். இதனைத் தான் நாடகக்காரர்கள் மறுவிளக்கம் உருவாக்கல்செய்தல் - Interpratation - என்று சொல்கிறார்கள்.
[இந்தக் குறிப்புகள் நாடகத்துக்கு மட்டும் உரியதல்ல; சினிமாவில் வேலை செய்பவர்களுக்கும் கூடப்பொருந்தக்கூடியதுதான்]
கருத்துகள்