இடுகைகள்

கல்விப்புல ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாயக்கர் காலம் .இயல். 7 மகளிர் நிலை -சமூக மதிப்புகள்- பண்பாட்டுக்கூறுகள்

படம்
நாயக்கர் கால இலக்கியங்களில் மகளிர் பற்றிய குறிப்புக்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. குறிப்பாக அரசியல் போன்ற அமைப்புக்களில் ஆடவர் சார்ந்த கூற்றுக்களே அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கான கடமைகள், கட்டுப்பாடுகள், பெண்கள் பற்றிய மதிப்புக்கள் முதலியவைகளே பெரிதும் கிடைக்கின்றன. பெண்கள் பற்றிக் கிடைக்கும் குறிப்புக்களும் பெண்களுக்குச் சமுதாயத்திலுள்ள பங்குகள் பற்றியோ, குடும்ப அமைப்பில் பெண்களுக்கு உரிய இடம் பற்றியோ அதிகம் பேசவில்லை. மாறாகப் பரத்தையர் பற்றி அதிகம் பேசுகின்றன. அடுத்து வயலில் உழைக்கும் பள்ளர் குலத்தைப் பெண்கள் பற்றிய - உழைப்புத் தொடர்பான - செய்திகளைத் தருகின்றன. செல்வக்குடிப் பெண்களைப் பற்றியோ, நடுத்தர நிலை யிலிருந்த குடும்பங்களின் பெண்களைப் பற்றியோ மிக குறைவாகவே பேசுகின்றன. அக்காலத்தில் இலக்கியங்களை முதன்மையாகவும், பிற சான்றுகளை அவற்றிற்குத் துணைமையாகவும் கொண்டு, அக்காலத்திய மகளிர் நிலை பற்றி இங்குக் காணலாம்.

நாயக்கர் காலம். இயல் . 5 தமிழுணர்வு

படம்
தமிழக வரலாற்றைக் கவனித்தால் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று என்ற வடிவங்களில் தமிழ்மொழி சமூகத்தன்மை பெற்று, சில காலங்களில் உயர்ந்த குரலிலும், சிலபோது தாழ்ந்த குரலிலும் ஒலித்து வந்துள்ளது என்பதை உணர முடிகின்றது. தமிழகத்தில் கி.பி. 1529 இல் தொடங்கி 1732இல் முடிவுற்ற காலப்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த நாயக்கர்களின் காலத்தில் எழுதப்பட்ட தமிழுணர்வின் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்வதன் மூலம், இத்தகைய குரல்களின் நோக்கத்தினையும் விளைவுகளையும் கண்டறிய முடியும். இந்நோக்கத்திற்கு அக்கால இலக்கியங்கள் தவிர்ந்த பிறவரலாற்று மூலங்களும் உதவக் கூடும் என்றாலும் பண்பாட்டுத்துறைகளில் ஏற்படும் நிகழ்வுகளை இலக்கியம் தற்போக்கில் படம் பிடிக்கக் கூடிய கருவியாக இருந்து வந்துள்ளது என்பது உண்மை. கி.பி. 1529 முதல் கி.பி. 1732 வரையிலான காலப் பகுதியே ஆய்வுக்குரியது என்றாலும், மொழியுணர்வு போன்ற பண்பாட்டு அசைவுகள் - ஒரு காலக்கட்டத்து நிகழ்வுகளாக மட்டும் இருந்து விடாமல், அதற்குப் பிந்திய காலத்து இலக்கியங்களிலும் வெளிப்படக்கூடும் என்பதால் அதற்குச் சற்றுப்பிந்திய காலப் பகுதியைச் சேர்ந்

நாயக்கர் காலம் இயல் 4. சமயநிலை

படம்
மனிதகுல வரலாற்றில் சமயங்களின் இடம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலும், பல சமயங்களின் பிறப்பிடமாகவும், பல சமயத்தவர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கண்டிருந்ததாகவும் உள்ள இந்தியாவின் வரலாறு பற்றிய ஆய்வில் சமயங்களின் பங்கு, தவிர்க்க முடியாதது . “சமயம் மனிதரை நெறிப்படுத்துவது; முறைப்படுத்துவது; சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை; சமயவாழ்க்கையினால் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புக்களாக மாறும்; இதயம் விரியும்; ஈர அன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும்; ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும்; இதுவே சமயத்தின் பயன் “ என ஆன்மீகவாதிகள் சமயத்திற்கு விளக்கம் தருகின்றனர்.1 ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமயமும் பரந்த அளவு மக்களைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன் காரணமாகத் தனது போதனைகளே உயர்வானது; உண்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியது என நிறுவவும் முயன்றுள்ளன. இருக்கின்ற சமயங்களின் போதனைகள் திருப்தி அளிக்காத நிலையில் புதிய சமயம் கிளைவிடுவதும், பழைய சமயத்தின் அதிகாரப் பரப்பைக் கையகப் படுத்தித் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதுமான செயல்களும் நிகழ்ந்த

நாயக்கர் காலம். இயல்.3. அரசும் நிர்வாகமும்

படம்
ஆளுதல், மேலாண்மைபுரிதல், உரிமைகளைப் பெற்றிருத்தல், சேவை புரிதல் முதலிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது அரசு (State) ஆகும். ஏதேனும் ஒருவகையில் ஒருநபர் அல்லது ஒரு குழுவினர் பிறரை விட அல்லது பிற குழுக்களை விட வல்லமையும், வன்மையும் பெற்றிருப்பதை இவ்வரசு குறிக்கிறது. அதிகாரங்கள், உரிமைகள் முறைப் படுத்தப்படும் போது அரசு ஒரு நிறுவனமாக அமைகின்றது. எனவே அரசும் ஓர் அமைப்பு முறைமையைக் கொண்டதே ஆகும்.

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

படம்
ஒரு தேசத்தின் மொத்தப் பரப்பின் சமுதாயநிலையை அறிய முயலும் அறிஞர்களும் சரி, அதன் பகுதியான ஒரு பகுதியை அறியும் நோக்கம் கொண்ட அறிஞர்களும் சமுதாயத்தின் பேரலகுகளான அரசமைப்பு, அதன் உட்கூறுகளான நிர்வாக அமைப்புக்கூறுகள், சமயம், சாதி, நாகரிகம் என்பன போன்ற அமைப்புமுறைகளை அறியவே முதன்மையாக விரும்புகின்றனர். ஆனால் சமுதாயக் கட்டமைப்புக்குக் காரணமாகவும், அதனை வழி நடத்துவதற்குரிய உந்துசக்தியாகவும், அதன் சாராம்சமாகவும் இருக்கின்ற பொருளாதாரச் செயல்பாடுகளையும் உறவுகளையும் அறிவது முதன்மை தேவையாகும். ஏனெனில் மனிதகுலம் தான் வாழ்வதற்கும், வளர்வதற்கும் உணவு, உடை, உறையுள் எனும் மூன்றையும் அடிப்படைத் தேவைகளாகக் கொண்டு முயன்று வருகிறது

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

படம்
தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது. பல்வேறு இலக்கிய வகை களையும் பலவகையான படைப்பாக்க முறைகளையும் தமிழ் இலக்கியம் கண்டுள்ளது, ஒரு மொழியின் இலக்கிய வரலாறு என்பதே ஒவ்வொரு காலத்திலும், இலக்கியங்கள் மாறி வளர்ந்து வருகின்ற தன்மையைப் பொறுத்தது தான். தமிழக வரலாற்றில் பிற்காலச் சோழர் காலத்தில் காணப் பட்ட காப்பியங்களின் எழுச்சி, அதன் பிற்காலத்தில் வீழ்ச்சி பெறுவதைக் காணலாம். அதன் பின்னர் சோழப் பேரரசு போன்ற பெரும் வல்லமை படைத்த அரசு அமைந்திராத நிலையில் இலக்கிய வரலாற்றிலும் மாற்றம் காணப்படுகிறது. சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய காலம் நாயக்கர்களின் காலம் என்பது பலரும் ஒப்புக்கொள்கின்ற செய்தி.. சிற்றிலக்கியங்கள் எத்தன்மையன? அவற்றின் பாடுபொருட்கள் எவை? பாடுபொருட்களுக்கும் வடிவத்திற்கும் இருந்த உறவு எத்தகையது? என்று இலக்கிய ஆராய்ச்சியில் கவனம்¢ செலுத்துவது தனி ஆராய்ச்சி. இங்கு அத்தகைய இலக்கியங்கள் வழியாக, அந்தக் காலத்து அரசியல் பொருளாதார, சமூக வாழ்க்கை ஆராயப்படுகிறது.

தமிழ்க் கவிதைக்குள் திணையென்னும் படிமம்

படம்
இந்தக் கேள்விகள் கவிதைகளை எழுதுபவர்களின் கேள்விகள் அல்ல. கவிதை வாசகர்களின் கேள்விகளும்கூட அல்ல. ஆனால் இலக்கியத்திறனாய்வு என்னும் விமரிசனம், “கவிதையை எப்படி வாசிப்பது?” என்ற கேள்வியில் தொடங்கி, “கவிதை எவ்வாறு உருவாகிறது?” என்பதை விளக்கிக் கொண்டே இருக்கின்றது. இப்படி விளக்குபவர்களை திறனாய்வாளர்கள் என்று சொல்வதைவிடவும், இலக்கியத்தை ஒரு கோட்பாடாக்கி விளக்கிவிட நினைப்பவர்கள் என்று சொல்லலாம்.

பாஞ்சாலி சபதம் - நாடகப்பனுவலாக்கம்

படம்
தமிழின் மறுமலர்ச்சிக் கிளைகள் ஒவ்வொன்றிலும் தனது திறனால் புதுத்துளிர்களை உருவாக்கியவர் கவி பாரதி. கவிதை கட்டுரை, புனைகதை, தன்வரலாறு எனப் பல தளங்களில் அவரது பங்களிப்புகள் பின்வந்தவர்களுக்கு முன்னோடியாக இருக்கின்றன. பழைய இலக்கியப்பனுவல்களின் வாசிப்பையும் ஆக்கத்தையும்கூட, தான் வாழுங்காலத்தைப் பதிவு செய்தல் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாற்றிப்புதுமை செய்தவர் அவர். இந்தப் போக்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது பாஞ்சாலி சபதம் என்னும் குறுங்காப்பியம். மகாபாரதமென்னும் இதிகாசத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் காலத்திற்கேற்ற விவாதப்பொருளாக்கிய பாரதியின் பாஞ்சாலி சபதம், அவருக்குப் பின் பல்வேறு பதிப்புகளையும் பனுவலாக்கங்களைக் கண்டு வருகிறது. அப்பனுவலாக்கங்களின் வழித் தமிழர்களின் கலை வெளிப்பாட்டுப் பார்வையில் பாஞ்சாலி சபதத்திற்கு ஓர் உயர்வான இடம் இருப்பதை உறுதி செய்கின்றனர். இக்கட்டுரை குறுங்காப்பியமென்னும் இலக்கிய வகைப்பாட்டிற்குள் வைத்துப் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தை நாடகப்பனுவலாக்கம் செய்யும் விதத்தை விவரிக்கிறது. குறுங்காப்பியங்களும் நாடகமும் இந்தியச் செவ்வியல் மொழிகளான சம்ஸ்கிருதமும

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்

படம்
தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். புதிய ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வுக்கோட்பாடுகள் எப்போதும் அரிஸ்டாட்டிலை மறந்துவிட்டுச் சொல்லாடல்களைத் தொடங்குவதில்லை. அவர் முன்வைத்த இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கியவர்களாகவும் அதிலிருந்து கிளர்ந்தெழுந்த கருத்தியல்களை முன்வைப்பவர்களாகவுமே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அரிஸ்டாடிலின் தொடர்ச்சி நான் அல்லது நானொரு புதிய அரிஸ்டாடிலியவாதி (New Aristotelian) என்று சொல்வதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது; மகிழ்ச்சி இருக்கிறது.

ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகளில் நடத்தை உளவியல்

முன்னுரை: ஐரோப்பியர்கள் அனைத்துச் சொல்லாடல்களையும் அறிவியலின் பகுதியாக பேசத் தொடங்கிய காலகட்டம் 18 ஆம் நூற்றாண்டு. தொழிற்புரட்சிக்குப் பின்பு மதத்தின் இடத்தைப் பிடித்த அறிவுவாதம், தர்க்கம் என்னும் அளவையியல் வழியாக ஒவ்வொன்றையும் விளக்கிக் காட்டியது. மனிதனின் மனச் செயல்களை விளக்கமுடியாத ஒன்றாகவும், காரணகாரியங்களுக்கு உட்படாத ஒன்றாகவும் இருந்த போக்குக்கு மாறாக அதனைச் சமூக உளவியலின் ஒரு பகுதியாகப் பேசி விளக்கிக் காட்டியது.

பட்டினப்பாலையில் புழங்குபொருட் பண்பாடு

முன்னுரை ஒரு மனித உயிரி தனது வாழ்தலுக்காக அளிக்கப்பெற்றதாக நம்பும் காலத்தின் ஒரு பகுதியை தன்னை வந்தடையும் ஒரு பிரதியை வாசிப்பதற்காக ஒப்புக் கொடுத்து வாசிக்கும்போது வாசகராக ஆகிறார். பிரதி வாசிக்கப்படும் நோக்கத்திலிருந்து வாசிப்பவர்களின் அடையாளம் உருவாகிறது. நோக்கம் அற்ற வாசிப்பும் கூட வாசிப்பு தான்.

சிற்றிலக்கியங்களின் காலப்பின்னணி

படம்
இலக்கியவரலாறும் நாட்டுவரலாறும்            தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது . அதன் வரலாற்றை எழுதியவர்களும் பல்வேறு விதமாக வரலாற்றை எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.   கருத்தியல் வரலாறும் இலக்கியவரலாறும் நகர்ந்த விதத்தைக் கலாநிதி ஆ.வேலுப் பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் முன்வைத்துள்ளது. கால அடிப்படையில் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமென நினைத்த அறிஞர் மு. அருணாசலம் நூற்றாண்டுகள் அடிப்படையில் இலக்கியவரலாற்றைத் தொகுத்துத் தந்தார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை எழுதப்பெற்ற அவரது இலக்கியவரலாற்று நூல்களில் முதன்மையான கவிகளின் காலத்தை அறுதியிட்டதோடு ஒவ்வொருவரின் பங்களிப்புகளையும், அவற்றின் சிறப்புத்தன்மைகளையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 

இலக்கிய இதழ்கள் :விடுதலைக்கு முன்னும்பின்னுமான சிற்றிதழ்ப் போக்குகள்

அம்ருதா, அரும்பு, உயிர்மை, பேசும் புதிய சக்தி, காக்கைச் சிறகினிலே, புதிய கோடாங்கி, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது முதலான மாத இதழ்கள் எனது முகவரிக்கு ஒவ்வொரு மாதத்தொடக்கத்திலும் வந்துவிடுகின்றன. இவற்றில் தொடர்ந்து எழுதுகிறேன் அல்லது எப்போதாவது எழுதுவேன் என்பதற்காக அதன் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காலச்சுவடு, தீராநதி இரண்டிலும் எழுதினால் அந்த மாதம் மட்டும் அனுப்புவார்கள். மற்ற மாதங்களில் கடைக்குப் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். நான் மாணவனாக இருந்த காலத்திலில் தொடர்ச்சியாக வாங்கி வாசித்த தாமரை, செம்மலர் போன்றனவற்றை நிறுத்தி கால் ஆண்டுக்கும் மேலாகி விட்டது. மாணவர்கள் சிலரிடம் வாங்கும்படி சொன்னால் வாங்க மறுக்கிறார்கள். வாங்க மறுக்கும் அவர்கள் சந்தா கட்டிக் காலச்சுவடு, விகடன் தடம், உயிர் எழுத்து, தீராநதி போன்றனவற்றை வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களிடமிருந்து பண்டமாற்றாக வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.   1990- களின் தொடக்கத்தில் அறிமுகமான உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற மூன்றின் தாக்கங்கள் இலக்கிய இதழ்களுக்கு வந்து சேர 10 ஆண்டுகள் தேவைப் பட்டன. எழுத்

ஆய்வுகள்:செய்ய வேண்டியனவும் வேண்டாதனவும்

படம்
இது ஒருவிதத்தில் கடலில் மூழ்கி முத்துக்களைத் தேடி எடுத்து மாலையாகத் தொடுப்பது போன்ற ஒன்று. ஆனால் இங்கே தேடப்படுவதும் திரட்டப்படுவதும் அறிவு என்னும் முத்துக்களும் மணிகளும் என்பதுதான் வித்தியாசம்.

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும்  பேரா. தி.சு. நடராசனின் எழுத்துகளின் மீது ஒட்டுமொத்தப் பார்வையைக் கவனப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட இக்கருத்தரங்கில் அவரது தமிழ் அழகியல்: மரபும் கோட்பாடும் என்ற நூலின் நோக்கத்தையும் அந்நோக்கத்தை வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பின்பற்றியுள்ள எழுத்து முறைமையையும் தமிழ்ச் சிந்தனை மற்றும் ஆய்வுப்பரப்பில் இந்நூலின் இடம் எத்தகையது என்பதையும் முன்வைக்கிறது இந்தக் கட்டுரை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்றொரு சொற்றொடர் நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கிறது. இலக்கணம் என்ற சொல்லோடு அழகியல், கலையியல், இலக்கியவியல் போன்ற கலைச்சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம். நீண்ட இலக்கியமரபு கொண்ட தமிழ் மொழிக்கு அதன் தொடக்க நிலையிலேயே எழுதப் பெற்ற இலக்கணம் – தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் வெற்று இலக்கண நூல் அல்ல; அது ஒரு இலக்கியவியல் கோட்பாட்டை – நவீனத்திறனாய்வு சொல்லாடல்களாகப் பயன்படுத்தும் அழகியல் கோட்பாட்டைப் போன்றது என்பதை விவரிக்கிறது இந்த நூல்.   

வரலாறுகள் எழுதப்பட்ட கதை

படம்
இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது. ஒரு தேசத்திற்கு வரலாற்றுணர்வு இல்லை எனச் சொல்கிறவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் , அந்தத் தேசத்தின் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான சான்றுகளைத் தொகுத்து வைக்காத நிலையிலிருந்தே இத்தகைய கருத்து உருவாகிறது என்பது புரிய வரலாம்.

நவீனத்துவமும் பாரதியும்

ஆங்கிலத்தில் மாடர்ன் (Modern), மாடர்னிட்டி (Modernity), மார்டனிசம்(Modernism) என மூன்று சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இம்மூன்று சொற்களின் வேர்ச்சொல் மார்டன் (Modern) என்பதே என்றாலும் பயன்பாட்டு நிலையில் வேறுபாடுகள் உள்ளன. இம்மூன்று சொற்களையும் தமிழில் நவீனம், நவீனத்துவநிலை, நவீனத்துவம் என மொழிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தலாம். தமிழில் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டியது.  நவீனம் என்பது அன்றாட வாழ்க்கையில் பெரிதும் பயன்பாட்டில் உள்ள சொல். நவீன நிலை என்பது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் முடிவுகளின் மீது மனிதர்கள் காட்டும் நிலைபாட்டின் பக்கச் சார்பைக் குறிக்கும் சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. இம்மூன்றிலிருந்தும் விலகிக் குறிப்பிட்ட காலகட்டத்துக் கலை இலக்கிய விவாதங்களைக் குறிக்கும் சொல்லாக நவீனத்துவம் இருக்கிறது. அச்சொல்லின் வருகையும் செல்வாக்கும் மேற்குநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் கலை இலக்கியப்பரப்புகள் பலவற்றிலும் இருந்தது.

தமிழில் நாடக எழுத்தும் பார்வையாளா்களும்

படம்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் வாழும் இந்தியர்கள் அல்லது தமிழர்களின் ‘நிகழ்காலம்‘ என்பதை 1990 - க்குப் பிந்திய பத்தாண்டுகளாகக் கொள்ளலாம். அவர்களது ‘சமகாலம்‘ இன்னும் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிப்போய் இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட பத்தாண்டுகளாக -1950-களாகக் கொள்ளப்படலாம். அவர்களது ‘நேற்று‘ என்பது ஒரு நூற்றாண்டுப் பழைமையாகவும் இருக்கலாம். ஓராயிரம் ஆண்டுப் பழைமையாகவும் கொள்ளப்படலாம். சிலருக்குத் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தொடக்கமான செவ்வியல் பாடல்களே கூட ‘நேற்றைய‘ இலக்கியங்களாகத் தோன்றலாம். இக்கட்டுரை இந்தக் காலப்பரப்பிற்குள் - காலம் என்ற சொல்லாடலுக்குள் புகுந்து கால விரயம் செய்ய விரும்பவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளைத் தொடக்கப் புள்ளிகளாகத் கொண்டு தமிழ்நாடக எழுத்தின் வரலாற்றை - அவ்வெழுத்துப் பிரதிகள் பார்வையாளா்களோடு எப்படி உறவு கொண்டன என்பதைப் பேசலாம் என்று திட்டமிட்டுக் கொண்டுள்ளது.

இலக்கிய ஆய்வுகளும் பிறதுறை அறிவும்: சில குறிப்புகள்

தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன. புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர்குழுக்கள்பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. கல்வித்துறை சாராத விமரிசனங்களும் ‘ரசனை அனுபவத்திலிருந்து நுகர்வு திணிப்பு’பற்றிப் பேசுவனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கல்விப்புல ஆய்வுகளும், சாராத ஆய்வுகளும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இம்மாற்றங்கள் வெறும் எண்ணளவு மாற்றங்கள் (Quantitative changes) மட்டும் அல்ல; பண்பு மாற்றங்களும் (Qualitative changes) கூட. தமிழில் நடந்துள்ள இந்த மாற்றம் இந்திய மொழிகள் பலவற்றிற்கும் பொருந்தக்கூடியது.

தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்

முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம்   பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது . அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது . கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் ( சங்க இலக்கியங்களும் ) என்பதனை மனங்கொண்டு , தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை . தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது . கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன .