இடுகைகள்

தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், அடிதடிகள் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.தினசரிகளில் படித்திருக்கலாம். மிகுந்த பொறுப்போடு எழுப்பப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அதனைச் சட்டமன்றம் எதிர்கொண்ட விதத்தினையும் பற்றிச் சொல்லித் தான் ஆக வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எழுப்பியவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பதால் அவை கூடுதல் கவனத்துக்குரியதும் கூட. எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது; இன்னொன்றுக்கு வெறும் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்துள்ளது.

அடையாள அரசியல்: கிரிக்கெட் விளையாட்டை முன்வைத்துச் சில பரிசீலனைகள்

படம்
இங்கே உருவாக்கப்பட்டுள்ள தேசியப் பெருமிதங்கள் என்னும் அடையாள அரசியலைப் பேச நினைக்கும் இந்தக் கட்டுரை, கொஞ்சம் பின்னோக்கிச் சென்று எட்டாவது உலகப் போட்டிகளில் நேரலைகளைப் பார்க்கச் சொல்கிறது. அங்கிருந்து இன்று வரை நீளும் காட்சிகளை முன்வைத்துப் பேசுகிறது எட்டாவது உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் நல்ல வேளையாக சச்சின் டெண்டுல்கா் சதம் அடிக்கவில்லை. ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிவிட்டார். அவா் மட்டும் சதம் அடித்திருந்தால் அடுத்து கங்குலிக்கும் யுவராஜ் சிங்கிற்கும் அந்த உற்சாகம் தொற்றி இருக்கும். ஆஸ்திரேலியா அடித்திருந்த அந்த வெற்றி இலக்கை - 358 ரன்களை - இந்திய வீரா்கள் எட்டிப்பிடிக்கவும், வெற்றிக் கோப்பையைத் தட்டிப் பறிக்கவும் முயற்சி செய்திருப்பார்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும் பட்சத்தில் டெண்டுல்கர் ‘பாரத ரத்னா‘ ஆகியிருப்பார். அரசாங்கங்களும் அவருக்கு வீடுகளையும் நிலங்களையும் வாரி இறைத்திருக்கும். கங்குலிக்கும் மற்றவா்களுக்கும் கூட அரசுகள் இப்படி நிறையத் தந்திருக்கலாம். பிரபலத்துவமும், கிளறிவிடப்பட்ட வெகுஜன உணா்ச்சிப் பெருக்கமும், இப்படி நிறையச் சாதித்திருக்கும். ஆனால், இந்தி

அழித்து எழுதும் ஆற்றல்-

கடந்த இரண்டு மாதகாலமாகத் தினசரி ஒரு நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. காதில் விழும் சொல்லாக இருந்த நிலை மாறி கண்ணில் படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகர்ப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் , அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடு கூடிய முகத்தையும்¢ கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி சில பத்துத் தடவையாவது பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இலக்கியக் கல்வியின் இன்றைய நிலை

தமிழை இயல், இசை நாடகம் எனப் பிரித்துப் பேசிய பண்டைய வரையறைகளை விளக்கிக் காட்டும் ஒரு ஒரு தமிழாசிரியர், நிகழ்காலத் தமிழிலிருந்து அவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டுகள் காட்ட முயல் வாரானால் அவரது பாடு பெரும் திண்டாட்டமாக ஆகிவிடக் கூடும்.ஏனென்றால் இன்று நம்முன்னே இருப்பனவெல்லாம் திரைப் படங்களின் தமிழும் அலைவரிசைகளின் தமிழும் தான். அதிலும் தமிழில் அலைவரிசைகளின் பெருக்கத்தினால் இயலும் இசையும் நாடகமும் ஆகிய முத்தமிழும் ஒன்றோடொன்று கலந்து குழம்பி நிற்கின்றன.