நான் வாழுகின்ற நகரம்
(உணரப்படாதவரை எதுவுமே சிக்கல் இல்லை ) திருநெல்வேலிக்கு நான் முதன் முதலில் போனது 1982 -இல் என்பது எனது நினைவு.மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பியூசிஎல்) தொடுத்திருந்த ஒரு வழக்கு நிதிக்காக ஞாநி எழுதிய பலூன் நாடகம் போட , மதுரை நிஜநாடக இயக்க நடிகனாக அங்கு போயிருந்தேன். திருநெல்வேலிக்குப் போகிறோம் என்று நினைத்தவுடன் அப்பொழுது பேச்சிலும் நினைப்பிலும் வந்த வார்த்தைகள் நான்கு. திருநெல்வேலி அல்வா, தாமிரபரணி ஆறு, பாளையங்கோட்டை ஜெயில், நெல்லையப்பர் கோவில்.