ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள் : நீல பத்மநாபனின் தனி மரம்
இலக்கியம் மனிதர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும்; வழிகாட்ட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தைப் பலரும் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்கள். ஒத்துக் கொள்பவர்களுக்குள் அதை வெளிப்படையாகச் செய்யலாமா? மறைமுகமாகச் செய்ய வேண்டுமா? என்பதில் மட்டுமே வேறுபாடுகள் உண்டு.