பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து
இந்தியாவில் இயங்கிவரும் நாடகப்பள்ளிகள் மேற்கத்திய அரங்க நுட்பங்களைப் பயிற்றுவிப்பதோடு, இந்திய அரங்கவியலையும் பயிற்றுவிக்கின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் 'முறைப்படுத்தப்பட்ட நடிப்புக் கோட்பாட்டை' கற்பிப்பது போலவே, பாரம்பரிய அரங்கில் நிகழ்த்துபவரின் உடல் மொழியையும் குரல் வளத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் கர்நாடகத்திலுள்ள நாடகப்பள்ளிகள் யட்சகானத்தையும், கேரளத்தில் கதகளியையும் கூடியாடத்தையும் பயிற்றுவிக்கின்றன. பாரம்பரிய அரங்கிற்கான பயிற்சி, ஒரு நடிகனை குறிப்பிட்ட வகை நடிப்புக்கு மட்டுமே உரியவனாக மாற்றிவிடும் அபாயம் கொண்டவை, என்ற போதிலும், அதிலிருந்து விடுபட்டு நடிப்பின் பல பரிமாணங்களுக்கும் சென்றவர்களும் உண்டு. பாண்டிச்சேரி பல்கலக்கழக நாடகப்பள்ளியும் தனது மாணவர்களுக்குப் பாரம்பரிய அரங்கை முறையான நபர்களைக்கொண்டு பயிற்சி தருவதில் பின்வாங்கியதில்லை. சில பல வாய்ப்புக்களின் மூலம் தமிழ்நாட்டில் பாரம்பரிய அரங்காக முன்னிருத்தப்பட்ட தெருக்கூத்து, இரண்டுமுறை மாணவர்களால் பயிலப்பட்டது. 1990ல் கலைமாமணி புரிசை கண்ணப்பத் தம்பிரான் ஒருமாதம