இடுகைகள்

இவனே இல்லையென்றால் யார்தான் மாகவி?

படம்
கவி பாரதி எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பலவிதப் பதிப்புகளில் கிடைக்கின்றன. கவிதைகள் அனைத்தும் இணையம் வழியாக வாசிக்கக் கிடைப்பதும், அவனது கவிதை சார்ந்த கருத்துக்கள் நேரடி மொழிபெயர்ப்பாகவும், சாராம்சம் சார்ந்த சுருக்கமாகவும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அதன் காரணமாக அவனது படைப்புகளும், படைப்பு வழியே முன் வைக்கப்பட்ட கருத்துக்களும் உலகம் தழுவிய இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமாயுள்ளன. விரிவான விமரிசனங்களும் வெளி வந்துள்ளன. ஆனால் அவனது கவிதைகளில் அவனைப் பற்றியும், அவனது கவிதைகளின் இலக்குகள் பற்றியும் எழுதி வைத்துள்ள குறிப்புகள் விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப் படவில்லை. இன்னும் சொல்வதானால் கவி பாரதி என்னும் தனிமனிதத் தன்னிலையை அடையாளப்படுத்தும் அப்பிரதிகள் பொருட்படுத்தத் தக்க பிரதிகளாகக் கூடக் கருதப்படவில்லை. அதற்கு மாறாக அவன் மகாகவி அல்ல என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.   கலைக்கோட்பாடு: ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப் பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக்கோட்பாடு அல்லது இலக்கியக் கோட்பாடு என்ற சொல் உள்ளது. படைப்பியக்கம் என்பது படைப்பு சார்ந்த ந

நூறில் ஒன்று: அரசியல் பேசத் தொடங்கிய ஊடகங்கள்

உயிர்மையின் 100 வது இதழுக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அனுப்பிய பதில். அச்சில் எப்படி வந்திருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை. என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: தமிழ்   ஊடகங்கள்   அரசியல் மயமானதன்   விளைவுகள்   என்ன?

கடந்த காலத்திற்குள் பதுங்கி இருக்கிறது இந்தியவியல்

படம்
பல்கலைக்கழக நுழைவு வாயில் போலந்து வந்த மூன்றாவது நாளில் நான் பணியாற்றும் இந்தியவியல் துறையின் தலைவர் பேரா . டேனுடா ஸ்டாசிக் கொடுத்த அழைப்பிதழ் தமிழ்நாட்டு நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச் சேரி பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பொறுப்பேற்று நண்பர் குணசேகரன் தலைமையில் ஏற்பாடு செய்த அரங்கியலாளர் சந்திப்பு தொடங்கி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தலித் எழுத்தாளர் சொற்பொழிவு வரிசை, செவ்வியல் கவிதைகளோடு நவீன கவிகளை உறவாட வைத்த பத்துநாள் பயிலரங்கு வரை ஒவ்வொன்றும் வந்து போய்க் கொண்டே இருந்தன.

பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”

படம்
அது போன்ற விருந்தோன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவில் கிடைத்ததில்லை. ‘தாராளமாகக் குடிக்கலாம்’ என அனுமதிக்கும் பாண்டிச்சேரியில் ஏழரை ஆண்டுகள் இருந்தும் இந்த அனுபவத்திற்காக வார்சா வர வேண்டியதாகி விட்டது. இதுபோலப் பல அனுபவங்களை வார்சா தர இருக்கிறது என்பதை ஒரு மாத காலத்திற்குள் புரிந்து கொண்டு விட்டேன்.