திரும்பத்திரும்ப வரும் கண்ணகி :
எல்லாச் சின்னங்களும் ஆபத்தானவை; இனம், இன உணர்வு உள்பட என்று நான் சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். ஏதேனும் ஓர் அடையாளம் தேவை என்கிறார்கள். இப்போது கண்ணகி சில தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம், எப்படி? அவள் கற்புக்கரசி. கணவன் செய்த பச்சைத் துரோகத்தை மன்னித்து ஏற்றவள். தவறாக அவன் கொல்லப்பட்டபோது அரசனிடம் சென்று நீதி கேட்டவள். அவளது கற்பே அவளது பலம். கண்ணகியை நவீனப் பெண் தனது அடையாளமாக ஏற்க மாட்டாள் என்று நான் சொன்னபோது ஒரு எழுத்தாள நண்பர் சொன்னார். ‘ நீங்கள் பார்ப்பணர்; அதனால் தமிழ்ப் பண்பாடு புரியாது உங்களுக்கு’