இடுகைகள்

இடையீட்டுப் பிரதிகளின் சாத்தியங்கள் : காண்டவ வனத்தை முன்வைத்து

படம்
மார்ச் 18, சனிக்கிழமை, கூத்துப்பட்டறையின் தயாரிப்பரங்கில் ப்ரசன்னா ராமஸ்வாமி நெறியாள்கையில் மேடையேறிய காண்டவ வனம் என்னும் நாடகப்பிரதியை ந.முத்துசாமி நாடகங்கள் என்ற தொகுப்பில் வாசித்திருக்கிறேன். முழுமையாக இல்லாமல் சில காட்சிகளாக மேடையேறியதையும் பார்த்திருக்கிறேன். அம்மேடையேற்றம் நாடகம் எழுதப்பெற்ற 1991 ஆம் ஆண்டிலா? அதற்கடுத்த ஆண்டிலா? என்பது நினைவில் இல்லை. அப்போது அப்பிரதியின் பெயர் காண்டவ வன தகனம். இப்போது காண்டவவனம். காண்டவ வன தகனம் என்பது மகாபாரத்தில் ஒரு பகுதி.

எழுத்துக்காரர்களின் புலம்பல்கள்

இலக்கியப்பட்டறைகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்படும் பட்டியலில் இடம்பிடிக்க எப்படி எழுதவேண்டும் நண்பர்களே? 

சென்னைக்கு வரலாம் நாடகம் பார்க்கலாம்

படம்
கலை, இலக்கியத் தளங்களின் நிகழ்காலப் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதையறியக் கூட்டங்களில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்ற நிலை 1990 களுக்குப் பின் இல்லை. அதுவும் முகநூலின் வருகை ஒவ்வொருவரையும் ஆகக் கூடிய தனியர்களாக வாழும்படி ஆக்கிவிட்டது. உலகத்தின் எந்தமூலையிலும் வாழ்ந்துகொண்டு, தமிழ்நாட்டில் இருப்பதுபோல உணரமுடியும் என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது.

நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல்

படம்
  புதியவர்களாக இருக்கும் நிலையில்  ஒரு நூலுக்கான   முன்னுரை   அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கவேண்டும் . ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டலாம் . நிவேதா உதயன் புதியவர் கவிதைக்கு. இது அவரது முதல் தொகுதி