என்னவாக ஆகப்போகிறாய் பெண்ணே
‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’ இந்தக் கேள்வி மனிதர்கள் ஒவ்வொருவரும் சந்திக்க நேர்ந்த கேள்விதான். பள்ளிப் பருவம் தொடங்கி, பல தடவை இந்தக் கேள்வியைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் மாணாக்கர்களுக்குக் கிடைக்கின்றன. வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் மட்டும் அல்லாது, அவர்களது பள்ளிக்கும், கல்லூரிக்கும் வரும் விருந்தினர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரும் இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு மாணாக்க ரிடத்திலும் எழுப்பத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருகையும் பேச்சும் நேரடியாக இந்த வினாவை எழுப்பாமல் போயிருக்கலாம். அவர்களின் வருகையின் சாரம் உணர்த்தும் உண்மை அது தான்.